ஞாயிறு, 13 ஜூன், 2010

நிலநடுக்கம்


சென்னையில் நேற்று இரவு ஒரு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. நான் நிலநடுக்கத்தை அசந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் உணரவில்லை. ஆனால், இன்று காலை செய்திதாளில் நிலநடுக்கம் வந்த செய்தியை படித்தபோது என் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தேன்.

வியாழன், 9 ஜூலை, 2009

புனே...




நண்பர் பிரபனுடன் டெல்லி மற்றும் புனே சென்று வந்தேன். புனே என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சாம்ராட் சிவாஜி...!


அவரது கோட்டைக்கு சென்று பார்த்தேன். சனிவார் வாடா என்ற இடத்தில் ஒளி,ஒலி அமைப்புடன் சிவாஜி வரலாற்றை மராத்தி, மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி சொல்கிறார்கள். நம்ம ஊரிலும் செஞ்சி உட்பட எத்தனையோ கோட்டை இருக்கிறது. அதன் வரலாறு மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. மராத்தி அரசு செய்வதைபோல் ஒளி,ஒலி அமைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி சொல்ல தமிழ்நாடு சுற்றுலா துறை ஏற்பாடு செய்தால் உபயோகமாக இருக்கும்...!