
சீனாவை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ‘நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்!’ என்று ஆசைப்பட்ட அரசன், அதற்கான வழி முறை களைக் கூறும் பொருட்டு கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களை அரண்மனைக்கு வரவழைத்தான். அங்கு அவர்களை கைதிகள் போல நடத்திய அரசன், தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான வழிகளைச் சொல்ல மறுத் தால் எவரும் உயிரோடு போக முடியாது என்று எச்சரித்தான். அறிஞர்கள் இப்படி ஓர் அபாயத்தை எதிர்பார்க்கவில்லை. ‘ஆயுள் கூடுவது என்பது ஆண்டவன் கையில் அல்லவா இருக்கிறது? இந்தப் பைத்தியக்கார ராஜாவிடம் இதை எப்படிச் சொல்வது,’ என்று திணறினர். அப்போது ஒரு அறிஞர் எழுந்து ‘‘தோழர்களே! நாம் ஒரு தந்திரம் செய்வோம். ஆயுள் கூடும் அதிசய மூலிகை ஒரு தீவில் இருப்பதாகவும், அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்துதான் எடுத்து வர வேண் டும்... அப்படி ஒரு மாத காலம் தங்க வேண்டி இருப்பதால் எங்கள் குடும்பத்தாரையும் அழைத்துச் செல்ல அனுமதி தர வேண்டும் எனக் கூறுவோம். அப்படி அவன் அனுப்பி வைத்தவுடன்& எரிமலைத் தீவு ஒன்று இருக்கிறது. கொஞ்சம் கஷ்டமான பூமிதான். இருந்தாலும், நாம் முயற்சி செய்தால் நிச்சயம் அதைச் சிரமப்பட்டுச் சொர்க்கபுரியாக மாற்றி விட முடியும்!’’ என்றார். அரசனுக்கு விஷயம் சொல்லப்பட்டது. தானியம், உதவிக்குச் சில வீரர்களுடன் கப்பல் கள் மூலம் அவர்களை அனுப்பி வைத்தான். ‘‘வெறும் கையுடன் திரும்பி வந்தீர்களானால் எவரும் உயிர் தப்ப முடியாது!’’ என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தான் அரசன். பிறகு அந்த அறிஞர்கள், தங்களுடன் வந்த படை வீரர்களைக் கொன்று விட்டு, அந்த எரிமலைத் தீவை சென்றடைந்தார்கள். அங்கு நிலத்தைப் பண்படுத்தி ஒரு நாடாக ஆக்கினார்கள்! அந்த நாடுதான் ஜப்பான்! எல்லா வகையான அறிஞர்களையும், உழைப்பாளிகளையும் கொண்டிருந்ததால்தான், அதிக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் ஒன் றாகத் திகழ்கிறது ஜப்பான்.










